என்.ஜி.மருத்துவமனையில் புதிய சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு திறப்பு

கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் 200 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள என்.ஜி.மருத்துவமனையின் புதிய சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தினை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்டிசியின் பொதுச் செயலாளருமான இ.ஆர்.ஈஸ்வரன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சரவணம்பட்டி கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் ஆசி உரை வழங்கினார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசின் மாநில வருவாய் நிர்வாக இணை ஆணையர் சிவராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 புதிய சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, ஃபிசியோதெரப்பி மற்றும் ரீஹாபிலிட்டேஷன் பிரிவு மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்அப் பரிசோதனை ஆகிய மருத்துவ பிரிவுகள் இந்த புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்டது.