கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பயோமெடிக்கல் பொறியியல் துறையின் சார்பாக பிரஷன் மெடிக்கல் டெக்னாலஜிஸ் மற்றும் மெடிஞ்சர் ஹெல்த்கேர் சொல்யூசன்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக பிரஷன் மெடிக்கல் டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பூபதி சக்திவேல் மற்றும் பொறியாளர்.முஹம்மது சாதிக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பரஸ்பர தொழில்நுட்ப பரிமாற்றம், ஆராய்ச்சிகள், பயிற்சிகள் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள் உருவாக்க முடியும் என்று கூறினார்.

இதில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், டீன்-கல்வி & ஆராய்ச்சி ராமசாமி, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் முனைவர் ஜெயஷீலா, பேராசிரியர் ஜெயக்குமார் கலந்துகொண்டனர்.