ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் கலை இலக்கியப் போட்டிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கலை இலக்கியப் போட்டிகள் ‘யாளி 23’ என்ற பெயரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு முன்னிலை வகித்தார். தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் சரவணன், அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் எழுத்தாளரான கவிஞர் ஆதவன் தீட்சண்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவின் ஒரு பகுதியாக திருச்சி, தந்தை பெரியார் அரசு கல்லூரியை சேர்ந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் பரமசிவன் தலைமையில் “இன்றய இளைஞரின் வாழக்கை போராட்டம் சுய முன்னேற்றத்திற்காகவா அல்லது சமூக முன்னேற்றத்திற்காகவா என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மறத்தமிழரின் மண்வாசம் மாறாப் போட்டிகளாகத் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, மௌன நாடகம், பறையிசை, பேச்சு, கவிதை, தனிநபர் நடிப்பு, கிராமத்துச் சந்தை, கிராமிய நடனம், சுவரோவியம் , மரபுத் தமிழன்/தமிழாள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இவற்றில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களுடன் பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.