அண்ணா படிப்பகம் சார்பில் பொங்கல் விழா

கோவை சிங்காநல்லூர் அண்ணா படிப்பகம் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பகுதி கழக செயலாளர் சாமி அண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோவை மாநகர மாவட்ட கழக செயலாளர் நா.கார்த்திக் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொங்கல் விழாக்களை துவக்கி வைத்தும் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் சூரிய பொங்கல் நிகழ்வை துவக்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் கழக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.