பாரதிய வித்யா பவனில் நான்காம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் நான்காம் நாளில், பாபநாசம் அசோக் ரமணியின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

அதன் முன்னர் காலை 9.30 மணியளவில் சத்குரு ஸ்ரீ தியாகராஜா ஆராதனா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.