லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 C, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை, என்.சி.ஐ.எ பவுண்டேஷன், ஃபைரா, ஃஎப்.ஓ.பி அறக்கட்டளை, என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடியது. லயன் செந்தில்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் ஆயுதப்படை பிரிவு, காவல் உதவி ஆணையாளர் சேகர், பல் சமய நல்லுறவு இயக்கம் தலைவர் முகமது ரபிக் கலந்துகொண்டு புத்தாடைகளை வழங்கினர்.