ஆதித்யா குழுமத்தின் சார்பில் பொங்கல் விழா

ஆதித்யா நிறுவனங்களின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, ஆதித்யா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்டின் இயக்குனர் சுந்தரபாண்டியன், ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சைன்ஸின் டீன் தீபா பிரபாகர் மற்றும் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஆதித்யா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட் மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.