பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை துவக்கம்

கோவை ஆர்.எஸ். புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா வெள்ளிக்கிழமை துவங்கியது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் துவக்க விழாவில் இசைக் கலைஞர் ராஜ்குமார் பாரதிக்கு ‘சங்கீத் சாம்ராட்’ விருதும், என்.வி.வைத்தியநாதனுக்கு ‘கோவை சுப்ரி முருக கான’ விருதும் வழங்கப்பட்டது.

பின்னர் மல்லாடி சகோதரர்கள் ராமபிரசாத் மற்றும் ரவிகுமார் குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவனின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், செயலாளர் சூரிய நாராயணன், பொருளாளர் அழகர்சுவாமி, பதிவாளர் பிரபாகர் ராவ், நிர்வாகக் குழு உறுப்பினர் பாலசுந்தரம் மற்றும் பி.எம்.எஃப் ஆர்கனைசேஷன் கமிட்டி கோர்டினேட்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.