கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

கோவை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பாக கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் ‘சமத்துவ பொங்கல் விழா 2023’ கொண்டாடப்பட்டது.

கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் நடைபெற்ற விழாவில் கலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

இதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் “இன்றைய மாணவர்களின் நல்வாழ்விற்கு வழிகாட்ட அவர்களின் போக்கில் சென்று அரவணைக்க வேண்டும் அல்லது நாமே திட்டமிட்டு நடத்திச் செல்ல வேண்டும்” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்திற்கு கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா நடுவராக பங்கேற்க இரு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் வாதிட்டனர்.

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மற்றும் கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் கீதா ஆகியோரது தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.