ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் பொங்கல் திருவிழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

பொங்கலைச் சுற்றி மாணவ மாணவியர்கள் கும்மி ஆட்டம், கம்பு சுற்றுதல், நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் ஆடி மகிழ்ந்தனர். கயிறு இழுத்தல், பானை உடைத்தல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், குப்பி நிரப்புதல், சாக்கு ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைப்பெற்றது.

பொங்கலையொட்டி பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவியபோட்டி மற்றும் பட்டிமன்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பால்ராஜ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.