விவேகானந்தா கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் கொண்டாடினர். சிறப்பு விருந்தினராக அமெரிக்கா ஆக்மென்ட் எல்எல்சி, டைரக்டர் ஆஃப் ஆபரேஷன்ஸ் அனிதா ஆனந்தா பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உறியடி, கயிறு இழுத்தல், தமிழ் கவிதை, பரதநாட்டியம், நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரியின் சி.இ.ஓ குணசேகரன், இயக்குனர் வளர்மதி, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.