சந்திர கிரகணம்: ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் நடை அடைப்பு

நாளைய தினம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் நாளை நடை சாத்தப்படுகிறது.

சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வரும் 8ம் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த நாள் (9ம் தேதி) காலை 6 மணி முதல் கோவில் வழக்கம் போல் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.