பருவமழையில் தேங்கும் நீர்: தண்ணீரை உறிஞ்செடுக்கும் உயரிய கருவிகள் தயார்

– கோவை ஆட்சியர்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், சாலைகளில் தேங்கும் நீரை உறிஞ்செடுக்கும் உயரிய கருவிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் கூறும்போது: வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம்.

பவானி ஆற்றோரம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சில பகுதிகள், வால்பாறை மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் என 16 இடங்களை அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

உள்ளாட்சி அமைப்புகள் தூர்வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. தண்ணீர்களை உறிஞ்செடுக்கும் உயரிய கருவிகள் தயாராக உள்ளன

பறவை காய்ச்சல் எதிரொலியாக கோவை மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாளையார் செக் போஸ்டில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்குரியவைகள் திருப்பி அனுப்பப்படுகிறது. கோவையில் பறவைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இல்லை என தெரிவித்தார்.