ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு வானதி சீனிவாசன் ஆதரவு

குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார்.

“ஏற்கனவே சம்பள உயர்வு பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேசப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்திட வேண்டும். மேலும் சட்டமன்ற பேரவை கூடும்போது நிச்சயமாக முதல் கோரிக்கையாக ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களின் ஊதியம் பற்றி எடுத்துத்துரைப்பேன். எந்த அரசியல் கட்சி தலைவர்கள் வந்து இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் ஏற்புடையதே” என்று வானதி சீனிவாசன் கூறினார்.