‘நன்னெறிச் செம்மல்’ விருது வழங்கும் விழா

கோவை நன்னெறிக் கழகம் சார்பில் ‘நன்னெறிச் செம்மல்’ விருது வழங்கும் விழா கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இந்த விருது பிரபல சித்த மருத்துவரும், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு உறுப்பினருமான சிவராமனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை இயகோகா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

மேலும் விழாவில் முதன்மை விருந்தினராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் வசந்த பாலன், ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், பிரிக்கால் நிறுவனத்தின் தலைவரும், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன், கங்கா மருத்துவமனையின் மருத்துவர் எலும்பு வல்லுநர் ராஜா சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.