ஆர்.வி கல்லூரியில் விநாயகர் கோயில் திறப்பு

காரமடை, டாக்டர்‌.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் ஆர்.வி.கலை அரங்கத்தின் அருகில் புதிய செல்வ விநாயகர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பூரண கும்பம் வைத்து யாகம் குண்டம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்து இராஜ அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையேற்றார். முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.