இஸ்ரோ: 36 செயற்கை கோள்கள் ஏவ திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள்களை இம்மாத கடைசியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது.

36 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மற்றும் விநியோக அலகுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த கிரையோஜெனிக் என்ஜின் உள்ள 2-வது கட்டத்தில் 36 செயற்கைகோள்களுடன் வெப்பக் கவசம் பொருத்தப்படும்.

இந்த 36 செயற்கைகோள்களும் சுமார் 6 டன் எடையை கொண்ட வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.

இந்தியா பார்தி குளோபல் மற்றும் இங்கிலாந்து நாட்டு அரசின் கூட்டு முயற்சியாகும். 36 செயற்கைகோள்களின் மற்றொரு தொகுப்பு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் புவி சுற்றுப் பாதையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தவகை செயற்கைகோள்கள் நிறுவனங்களின் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப்பாதையில் 650 செயற்கைகோள்களின் தொகுப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.