பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வெற்றி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

21 வது கொங்கு கோப்பைக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அணி, கோவை பி.எஸ்.ஜி.கல்லூரி அணியை 3-1 என்ற செட் கணக்கிலும், சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக அணியை 3-1 என்ற செட்கணக்கிலும், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. அணியை 3-1 என்ற செட்கணக்கிலும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். இதில் மாணவர் பிரபு சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் வடிவேலு ஆகியோரை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.