குமரகுரு கல்வி நிறுவனத்தில் புதிய முதுகலை பட்டப் படிப்பு துவக்க விழா

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் கோவை நடத்தும் டிபென்ஸ் மாநாடு 2022 இன்று  நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாமின் 7வது நினைவு நாளன்று “பாதுகாப்பு துறையின் உள்நாட்டுமயமாக்கல் தேவைகள், வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை திறன்கள்” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவெலப்மென்ட் அசோசியேஷனின் பாதுகாப்பு தொழில் நுட்பம் குறித்த புதிய முதுகலை பட்டப் படிப்பும் துவக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவை துவக்கி வைத்த தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவெலப்மென்ட் அசோசியேஷனின் தலைவர் கிறிஸ்டோபர் பேசியதாவது, பாதுகாப்புச் சேவைகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் உள்நாட்டுமயமாக்கல் தேவைகள் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான தயாரிப்புகளை புதுமைப்படுத்தவும், மேம்படுத்தவும்,  சுயமாக தேசிய நோக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை  எடுத்துக்கூறினார்.

குமரகுரு தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குனர் வசந்த்ராஜ் கூறியதாவது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உற்பத்தியில் நுழைவதற்கு  ஆர்வமுள்ள வளர்ந்த வரும் எந்தவொரு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்  கலந்து கொள்ளலாம்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டில், தமிழ்நாடு அரசின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கைக்குப்பிறகு, மொத்த முதலீடுகள் ரூ. 10,000 கோடி. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் இணைந்து மேம்பட்ட நடுத்தர போர் விமானம் மற்றும் இந்திய மல்டி ரோல் ஹெலிகாப்டர் வசதியை கோவையில் உள்ள சூலூரில் தயாரிப்பதற்கான கூட்டு முயற்சியை அமைப்பது குறித்து ஆலோசிப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக, கோவையில் பாதுகாப்புக் கூறுகள் மற்றும் அமைப்புகளின் உற்பத்தி மற்றும் சோதனைக்கான பொதுவான வசதி மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வுக்கு ஏரோநாட்டிகல் டெவெலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் முன்னாள் இயக்குனர் வேணுகோபால், இந்திய ஆயுதத்தொழிற்சாலை சேவைகளின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தின் பாதுகாப்புத் தொழில்நுட்ப பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.