தமிழகத்தில் அரசு பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த ஜூன் 22 முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் மாணவர்கள் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 27-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என யு.ஜி.சி. உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்தநிலையில் மாணவர்களுக்கு கொடுத்த அவகாசம் இன்று மாலையுடன் முடிகிறது.