நரேந்திர மோடி மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடல்

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின். அப்போது,  நரேந்திர மோடி தொலை பேசியின் மூலமாக முதல்வரை  தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

அதனைத்தொடர்ந்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்து, நான் குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்பவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

மேலும், சென்னையில் வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு தான் தற்போது, மருத்துவ சிகிக்சை பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்,பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள  வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.