கே.பி.ஆர் சார்பில் குறிஞ்சி விருதுகள் வழங்கும் விழா

கே.பி.ஆர் கல்வி குழுமத்தின் சார்பில் ‘குறிஞ்சி விருதுகள் – 2022’ வழங்கும் விழா கே.பி.ஆர் மில் அரங்கத்தில் நடைபெற்றது.

கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மலேசியா நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்.

குறிஞ்சி தமிழ்ச் செம்மல் விருது, பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் குறிஞ்சி தமிழ் நல்லாசிரியர் விருது, கோவை பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தமிழாசிரியர் சியாமளா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.