கே.பி.ஆர் மில் நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

 

கே.பி.ஆர். மில் லிமிடெட்டில் இயங்கும் கே.பி.ஆர். பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவில் 9 வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மலேசியா நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

 

இதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்புரை ஆற்றி பேசினார். நமது நம்பிக்கை மாத இதழ் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தைய்யா வாழ்த்துரை வழங்கினார். மேலும் செயல் இயக்குநர் சக்திவேல் கலந்துகொண்டார்.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் 646 மாணவிகள் பட்டம் பெற்றுக்கொண்டனர். இதில் பி.சி.ஏ துறையை சேர்ந்த நிவேதா என்ற மாணவிக்கு ‘சிம்கா’ என்ற விருது வழங்கப்பட்டது.

 

8 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் மாணவிகளின் பெற்றோரும் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.