எஸ்.என்.எஸ் கல்லூரியில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

கோவை மாவட்டம் சரவணம்பட்டி குரும்பபாளையத்தில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீஷீர்டி சாய்பாபா திருக்கோவில் கட்டபட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூன்று நாட்கள் சிறப்பான ஹோமங்கள் நடைபெற்றது.

இவ்விழா எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன், இராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் சமுக கலந்துகொண்டு வழிபட்டு சென்றனர்.