அஞ்சல் துறை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலவச ஆதார் திருத்த முகாம்

கோவை பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், இந்திய அஞ்சல் துறை, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இலவச ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், கோவை அஞ்சல் கோட்ட இந்திய அஞ்சல் துறையின் சார்பிலும், பாப்பநாயக்கன் புதூர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையின் சார்பிலும், பொதுமக்களுக்கான ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

முன்னதாக இந்த முகாமில் பங்கு பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்த பொதுமக்களுக்கு, ஆதார் அட்டையில், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல் போன்ற பல்வேறு பணிகளை பொதுமக்களுக்கு செய்து வழங்கினர்.

இதுகுறித்து ஏஐடியுசி அமைப்பின் பொதுச்செயலாளர் தங்கவேலு கூறுகையில், “நம் நாட்டில் ஆதார் தனிமனிதனின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றது. ஆதார் அட்டைகளில், பொதுமக்கள் பெயர் மாற்றவும், திருத்தம் செய்யவும் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களின் அலைச்சலை குறைக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.