பில் தராவிட்டால் பணம் தராதீங்க: ரயில்வே

ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால் பணம் தர வேண்டாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு, கூடுதல் விலை வசூலிக்கப்படும் புகார்கள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளன. கடந்தாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும், 7,000 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு பில் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில்களிலும் விளம்பரம் செய்யப்படும். ‘வாங்கும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால், அதற்கான பணத்தை பயணியர் செலுத்த வேண்டியதில்லை’ என, ரயில்வே கூறியுள்ளது.

Dinamalar.com