திமுகவினர் சார்பாக நலத்திட்ட உதவிகள்

பேருர் கழகத்திற்குட்பட்ட முனியப்பன்பதி ஆதிகுடி மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களும் மற்றும் கால் செயலிழந்து இருக்கும் பெண்மணிக்கு மருத்துவ செலவுக்கு நிதி உதவி ஆகியவற்றை திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்குமார், பேருர் கழக செயலாளர் ராமராஜ் , பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் கோவை கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கமலம் தொண்டரணி அமைப்பாளர் பரிமளாராணி மற்றும் துணை அமைப்பாளர்களுடன் கலந்து கொண்டார்கள்.

மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள், உணவு வழங்குதல், மருத்துவ பணிகள், ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.