கோவை தி.மு.க வடக்கு மாவட்டம், சுகுணாபுரம் பகுதி கழகம் சார்பாக கோவைபுதூர், குளத்துப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் முட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இதில் சுகுணாபுரம் பகுதி பொறுப்பாளர் மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவரது ஏற்பாட்டில் நடைபெற்ற இதில்,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முட்டைகளை வழங்கினர்.
முன்னதாக பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கி, அனைவரும் இருக்கையில் அமர வைத்து சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பகுதி, வட்டக்கழகம், கிளை நிர்வாகிகள், மகளிர் அணி உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.