அரசு மருத்துவமனையில் தீ பற்றி எரிந்த அம்புலன்ஸ் !

கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பபட்டார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் கொரோனா மேல் சிகிச்சைக்காக அவரை மருத்துவ பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.

இந்தசூழலில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது.  தீப்பிடிப்பதற்கு சற்று நேரம் முன்பு தான் நோயாளி ஆம்புலன்சில் இருந்து வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆகையால் வாகனத்தின் அருகே யாரும் இல்லை.

இதனிடையே தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்சில் பிடித்திருந்த தீயை அணைத்தனர்.

ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் துணை ஆணையர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.