கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இருசக்கர வாகனத்தில் சென்று (27.3.2021)பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ராஜவீதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடைபெற்ற மகளிர் பேரணியில் ஏராளமான பெண்கள் இருசக்கர வாகனத்திலும், நடை பயணமாகவும் பங்கேற்றனர்.
ராஜவீதியில் துவங்கிய தெப்பகுளம் மைதானம் வரை நடைபெற்ற பேரணியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பங்கேற்றார். சிறிது தூரம் பிரச்சார வாகனத்தில் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பின்னர் இரு சக்கர வாகனத்தில் பயணித்து வாக்கு சேகரித்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேட்பாளர் வானதி சீனிவாசனும் பயணித்தார்.
பிரச்சாரத்தின் போது வானதி சீனிவாசன் பேசுகையில்:
மக்கள் சேவை மையம் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றோம் எனவும், எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் வேலை பார்த்தால் அகில இந்திய தலைவர் பதவி கூட கிடைக்கும் என்பதற்கு நான் உதாரணம் என தெரிவித்தார்.
நெசவாளர்கள், ஐவுளித்துறை என சார்ந்த கோரிக்கைகள் குறித்து எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்பவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி. மேலும் ஐவுளி தொழிலை உலக அளவில் கொண்டு செல்ல எப்போதும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உதவுவார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.