வேலம்மாள் நெக்சஸ் குழுமம் மெய்ந்நிகர் ஆசிரியர் தின விழா

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சார்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா மெய்நிகர் விழாவாகக் கொண்டாடப்பட்டது.  கொரோனா தொற்றுநோய் காரணமாக மாறுபட்ட கற்பித்தல் முறைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும் தங்களைத் தாங்களே மெருகேற்றிக் கொண்டு மாற்றங்களைத் தழுவுவதில் முன்னணியில் இருந்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் நிர்வாகம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தது.

இந்த மெய்நிகர் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் புகழ்பெற்ற பிரமுகர்களாகிய தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து இந்தத் தொழிலை ஆர்வத்துடன் தொடர ஊக்கப்படுத்தினர்.

மாணவர்களிடமிருந்து பாராட்டுதல்கள் மற்றும் வாழ்த்துகள் பற்றிய குறிப்பு ஆசிரியர்களையும் அவர்களின் இடைவிடாத சேவையையும் நினைவுகூரும் வகையில் அமைந்தது . மேலும் நெக்ஸஸ் குழுவின் மூத்த முதல்வர் ஜெயந்தி ராஜகோபாலன், முதல்வர் ஷியாமலா சுப்பு ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து ஆசிரியர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த இணையவழி நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துக் கொண்டனர். விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: 8056063519