இசை என்றும் மாறாது

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘நேற்று இன்று நாளை’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வி.வி.எஸ். முராரி வயலின் வாசிக்க, விஜய கோபால் புல்லாங்குழல் இசைக்க, ஸ்ரீ சுமேஷ் நாராயண் தாள வாத்தியம் போட, ரவி. ஜி கீ போர்ட் வாசிக்க இந்த இசை நிகழ்ச்சி முக்காலத்தையும் செவி வழியாக மனதில் நிலை நிறுத்தியது.
இதில் பழைய, புதிய பாடல்களின் தொகுப்புகளை இசையாக கொடுத்தனர். இங்கு அரங்கு நிறைந்த இசை பிரியர்கள் மேடைக்கு ஈடுகட்டும் அளவில் தங்களது இசை ஆர்வத்தை தாரளமாக வெளிப்படுத்தினார்கள்.