விமான நிலையத்தை விரிவுபடுத்த கோரிக்கை – எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று ( 27.12.18 ) புதுடெல்லியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்களை நேரில் சந்தித்து, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் 627.89  ஏக்கர் நிலம் கையகப்படுத்தும்  பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வலியுறித்தினார். இச்சந்திப்பின் போது, பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர். மு.தம்பிதுரை அவர்கள், மாநிலங்களவை உறுபினர்கள் ஆர்.வைத்தியலிங்கம் அவர்கள், ஏ.கே.செல்வராஜ் அவர்கள், கே.ஆர்.அர்ச்சுனன் அவர்கள், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் அவர்கள் உடனிருந்தனர்.