ஏ.ஐ. பயன்பாட்டில் பொறுப்பு மற்றும் நெறிமுறைகள் அவசியம்     – எஸ். என்.எஸ்.  பட்டமளிப்பு விழாவில் ராஜ ராஜன்

எஸ். என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி16- வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

எஸ் என்.எஸ் கல்விக் குழுமங்களின்  தலைவர் முனைவர் எஸ்.என்.சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குநர்   எஸ்.நளின் விமல் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக  அசன்ஜர், அனலிடிக்ஸ் அட்வைசரின் துணைத் தலைவரான ராஜ ராஜன்  கலந்து கொண்டு உரையாற்றியதோடு இளங்கலை மற்றும் முதுகலையைச் சேர்ந்த 768 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.

அவர் பேசுகையில் செயற்கை நுண்ணறிவுறிவைப் பயன்படுத்தும் போது பொறுப்பு மற்றும் நெறிமுறைகளை நம் மனதில் வைக்க வேண்டும், தனியுரிமை, சுயாட்சி மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அல்காரிதங்களில் சார்பு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுதல் போன்ற ஏ. ஐ யின் தவறான பயன்பாட்டைத் தடுக்க வலுவாகச் செயல்பட வேண்டும். ஏ.ஐ. புதிய வாய்ப்புகள் மற்றும் தொழில்களை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கல்லூரியின் தாளாளர் மருத்துவர் எஸ். இராஜலட்சுமி வாழ்த்துரை வழங்க முதல்வர் அனிதா வரவேற்புரை வழங்கியதோடு 2023-2024 கல்வியாண்டிற்குரிய அறிக்கையையும் வாசித்தார்.

இதில் எஸ். என்.எஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல்,  துணை முதல்வர் நரேஷ் குமார் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.