என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாடல் நிகழ்வு

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில்  ‘தேசிய மாணவர் படை மிகவும் மாற்றத்தக்க ராணுவத் திறன்கள் மற்றும் ஆயுதப்படைகளில் தொழில்’ என்ற தலைப்பில் விரிவுரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் இணை என்சிசி அதிகாரி லெப்ட்னண்ட் பிரதீஷ் நிகழ்வின்முக்கியத்துவத்தை விவரித்தார்.  கல்லூரியின் முதல்வர் பிரபா, மாணவர்களுடைய ஒழுக்கம் மற்றும் திறன் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த கேப்டன் டாக்டர் நீலகண்டன் பங்கேற்று,  ராணுவத் துறையில் சேர்வதற்கான பல்வேறு முறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.