ஆச்சிப்பட்டியில் நாளை(மார்ச்.13) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைக் குறித்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி மற்றும் கோவை தெற்கு மாவட்டச்‌ செயலாளர்‌ தளபதி முருகேசன் ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (13.03.2024) காலை 9.00 மணியளவில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்‌ கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

நிகழ்ச்சி தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

அதுசமயம்,  நிகழ்விற்கு  ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக்‌ கழக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக் கழக, ஒன்றியக் கழக‌, பகுதிக் கழக, பேரூர்க்கழக, வட்டக்கழகச் ‌செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தது.