ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவிற்குக் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை தாங்கினார்.

முதல்  நாள் விழாவில் ,  பெங்களூரு , எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆஷிஷ் குஷு , சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட  துறைகளைச் சேர்ந்த 549 பேருக்குப் பட்டம் வழங்கினர்.

இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தின் ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின்  செயல்பாட்டுத் தலைவர் ராமநாதன் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்,  சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட துறையை சேர்ந்த 545 மாணவ மாணவியருக்குப் பட்டம் வழங்கினார். மேலும்,  துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்குத் தங்கப்பதக்கங்களும் சிறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரி முதல்வர் அலமேலு, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் கருப்புசாமி, துறைத் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து  கொண்டனர்.