ஆசிய சிலம்பம்: இந்துஸ்தான் பள்ளி மாணவர் அசத்தல்

இந்துஸ்தான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் அ.ரூபேஷ்குமார், நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலம்பம் போட்டிகளில் விளையாடி வரும் இவர், சர்வதேச அளவில் மூன்று விதமான போட்டிகளில் பரிசு பெற்றார். இவர் சிலம்பம் குழு விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார். சிலம்பத்தில் குதிவரிசை தனிநபர் போட்டியில் இரண்டாம் பரிசும் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். தனிநபர் கம்பு சண்டைப் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றிருக்கிறார். இப்போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்றதுடன், தற்போது சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகி உள்ளார்.

பரிசுகளும் பதக்கங்களும் வென்ற மாணவர் ரூபேஷ்குமாரை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் டாக்டர் பிரியா சதீஷ்பிரபு, பள்ளி முதல்வர் செண்பகவல்லி உள்ளிட்டோர் பாராட்டினார்.