ஆன்மீக உற்சவம் “எப்போ வருவாரோ” நிகழ்ச்சி துவக்கம் 

புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் அருள் நிறைந்த ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 துவக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிகழ்வு ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.

“எப்போ வருவாரோ” 2022 நிகழ்வில் தன்னலமற்ற சேவை செய்கின்றவர்களை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கௌரவப் படுத்தவுள்ளது. அந்த வகையில் இன்று உழவாரப்பணியும், அன்னதானமும் வழங்கி வரும் சிவதிரு.செந்தில்குமாருக்கு “அருள் வளர்செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எப்போ வருவாரோ நிகழ்ச்சியை 16 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியதற்கு ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணனுக்கு மரபின்மைந்தன் முத்தையா நினைவுப் பரிசினை வழங்கினார்.

முதல் நாளில் மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு திருஞான சம்பந்தர் குறித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.