நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர்

கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு 2.87 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு பெட்டகத்தை பொதுமக்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், சளி, காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். கோவை மாநகராட்சி மூலமாக மருத்துவ முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 புதிய ஆம்புலன்ஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். மேலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் துவக்க நடுநிலை பள்ளி, மெட்ரிக் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து ஒருவருக்கும் என மொத்தம் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு 10,000 ரூபாய் வழங்கி கவுரவித்தார்.

மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன புதிய பாடத்திட்டத்திற்கான பாடநூலில் இணையதளங்கள் பதிவேற்றம் செய்யும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

மேலும், இளுவ தியா பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு அறிவித்ததை தொடர்ந்து சான்றிதழை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.