ரோட்டரி கிளப் சார்பில் “ஸ்மார்ட் டைலர்” திட்டம் துவக்கம்

கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் காரமடை தோலம்பாளையத்தில் “ஸ்மார்ட் டைலர்” திட்டம் துவங்கியது. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 20 டைலரிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன

ரோட்டரி இன்டர்நேஷனல் ஆர்ஐடி 3201 சார்பில் “ஸ்மைல்” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தில், பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில் தொழில் பயிற்சியை அளித்து வருகிறது. இதில் 50 பழங்குடியின பெண்கள் டெய்லரிங் பயிற்சி பெற்று, புதிய தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு, சுயச்சார்பு வாழ்க்கைக்கும் வேலைக்கும் பயிற்சி பெறுவர்.

இந்தப் பயிற்சி மையத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான 20 டைலரிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான பயிற்சிக் கட்டணமாக மாதந்தோறும் 8000 ரூபாய் வீதம் 96000 ரூபாயைக் கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் செலுத்துகிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஆர் ஐ டி 3201 மாவட்ட இயக்குநர் கோகுல்ராஜ் பங்கேற்றுத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினராகத் துணை கவர்னர் வெங்கட் பங்கேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் ரோகிணி சர்மா, செயலாளர் முர்துஸா ராஜா ஆகியோர் இந்தத் திட்டத்தை, மாவட்ட முன்னோடி திட்ட தலைவர் ராஜேஷ் நந்தா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தினர். சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் டாக்டர் மீரா தலைமையிலான அணி செயல்படுத்துகிறது.

மேலும், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட்சிட்டி உறுப்பினர்கள் ரோட்டேரியன் ஜெயஸ்ரீ கோட்டா, ரோட்டேரியன். ஸ்வேதா குப்தா, ரோட்டேரியன். ரஷிதா ராஜா மற்றும் ரோட்டேரியன் சுஜா அருண், தோலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா செந்தில், வார்டு உறுப்பினர் ராணி, சிறுவாணி அமைப்பின் இயக்குநர் மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.