கே.பி.ஆர் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டக் குழு மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களின் மூலம், கல்லூரி  முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோரை நன்கு பரிசோதனை செய்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர். இதில் 202 பேர் இலவசமாகக் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் கல்லூரி முதல்வர் இராமசாமி கூறுகையில், “மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வை பேணுவதின் ஒரு பகுதியாக நாங்கள் இந்த மருத்துவ முகாமை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பாக நடத்தி உள்ளோம்”, என்றார்.