இந்தியாவில் முதல் முறையாக ஃபிக்சர் தயாரிப்பு தொழிற்சாலை துவக்கம்

தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாகக் கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த மக்கினோ நிறுவன அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

நாட்டிலேயே முதன் முறையாக, ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஜப்பானை சார்ந்த மகினோ என்ற தொழிற்சாலை கோவை கருமத்தம்பட்டியில் நிறுவப்பட்டது . ஜப்பானில் 85 வருடங்களாக இயங்கும் மகினோ நிறுவனம், கோவையில் முதலீடு செய்த நிலையில், அதிநவீன தொழில்நுட்பத்துடனான மகினோ தொழிற்கூட திறப்பு விழா நடைபெற்றன.

அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இன்ஜினியரிங் உற்பத்தி பணிகள் செய்யும் முறையான ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஏரோ ஸ்பேஸ் மற்றும் ஆட்டோ மோட்டிவ் எலக்டானிக் துறைகளுக்கான பாகங்களைத் தயாரிக்கும் இயந்திரங்களை, இதில் உற்பத்தி செய்யவிருக்கின்றனர்.

இந்நிறுவனத்தின் துவக்க விழாவில் மகினோ நிறுவனத்தின் ஜப்பான் மற்றும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்  கலந்துகொண்டனர். இந்தியாவில் இயங்கும் ஜப்பானின் மகினோ நிறுவனங்களுக்கான தலைவர் ராகோ பாத்தியா மற்றும் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, 2021ல் கோவையில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு ஜப்பானின் மகினோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாகத் தெரிவித்தனர். தொடர்ந்து பேசுகையில், ஒப்பந்தம் கையெழுத்தான நாள் முதல் தமிழ்நாட்டின் அதிகாரிகள் உதவ முன்வந்தனர் . கம்பெனி கட்டமைப்பு சாரத்தை அறிந்து, நிலத் தேர்வு முதல் தொழிற்சாலையின் நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்த போதுமான வசதிகள் வரை அனைத்தும் செய்து தந்தனர். தொழிற்சாலை கட்டமைப்பு  பணிகள் நடக்கும்போது தமிழ்நாட்டின் அதிகாரிகள் உடன் இருந்து பயணித்தனர். ஒவ்வொரு முறையும் பணிகள் முடியும் வரை அழைத்துப் பின்பற்றினர் . இந்த நிலையில், பொறியியல் உற்பத்தித் துறை இங்கு சிறந்து விளங்குவதால், ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் கோயமுத்தூரில், தொழிற்கூடங்களை அமைப்பார்கள். ஜப்பான் நிறுவனங்கள் மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களும் கோவை நகரத்திற்கு வர வாய்ப்பு இருக்கின்றது. ஜப்பான், ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களின் முதலீட்கள், சீனாவை விட இந்தியாவில் அதிகம் வந்து கொண்டிருக்கிறன.