மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திட்ட விளக்க கூட்டம்

கோவை ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

நிகழ்விற்கு மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் தலைமை வகித்து, தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்கு தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில்  மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்ட மைதிலி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், தேவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், திட்ட அலுவலர் பாலு,சேர்மன் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.