சமூக பொறுப்பில் எஸ்.என்.எஸ் கல்வி குழுமம்

சமூக மாற்றம் என்பது மாணவர்களால் தான் சாத்தியம் என்பதை உணர்ந்த எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் மற்றும் ரேடியோ மிர்ச்சி இனைத்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பாடலை இயற்றி அதற்கு ஏற்ற காணொளி ஒன்றை தயாரித்து அதனை வெளியிட்டுள்ளனர்.

இதன் வெளியிட்டு விழா எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட  காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பங்கேற்றார். அவருடன் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் இனைத்து காணொளியை வெளியிட்டனர்.

மேலும் காவல் ஆணையர் எழுதிய புத்தகத்தை பற்றி சிறப்பாக விமர்சன‌‌ கட்டுரை எழுதிய‌ மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரேடியோ மிர்ச்சியின்‌ பல உறுப்பினர்கள் மற்றும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.