நேதாஜியின் சுதந்திரப் போராட்டத்தில் நான் இணைந்தபோது எனக்கு 17 வயது. 95-வயது ‘ஆஷா சான்’ தனது நம்பமுடியாத கதையை புத்தகத்தின் வாயிலாக நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஈர்க்கப்பட்ட , ஆஷா சஹாய் ஐ.என்.ஏ-வின் ராணி ஆஃப் ஜான்சி படைப்பிரிவில் சேர்ந்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியபோது அவருக்கு வயது 17. அவரது கொள்ளுப்பேத்தி தன்வி ஸ்ரீவஸ்தவா, அவரது நம்பமுடியாத கதையை ‘The War Diary of Asha-san’ என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
1943 ஆம் ஆண்டில், கிழக்கு ஆசியாவில் சுதந்திர இயக்கத்தை வழிநடத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனி வழியாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானை அடைந்திருக்கிறார். அப்போது, ஒல்லியான வடிவு தோற்றம் கொண்ட ஒரு இளம், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவருடன் இணைந்து போராட்டத்தில் உதவுவதற்கான தனது முடிவைத் தெரிவித்திருக்கிறார்.
15 வயதே ஆன, ஆஷா சஹாய் பார்த்த நேதாஜி, படையணியில் சேர்வதற்கான உரிய வயது இல்லை என்று சமாதானப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அவர் முன் நின்று, தன்னைப் படையில் சேர ஆஷா அனுமதிக்கக் கோரியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் ஜப்பானில் வளர்ந்த அவர், போருக்கு அஞ்சவில்லை. அவரது உறுதியால் ஈர்க்கப்பட்ட நேதாஜி, ஜப்பானியர்களின் உதவியுடன் காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை அகற்றும் நோக்கத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட பெண்கள் படைப்பிரிவில் சேர அனுமதித்தார்.
கடுமையான பயிற்சிக்குப் பிறகு, ஆஷா சஹாய் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணியின் லெப்டினன்ட் ஆனார். இப்போது 95 வயதான ஆஷா சான், பீகாரில் உள்ள பாட்னாவில் வசிக்கிறார். அவரது அசாதாரண வாழ்க்கை அனுபவங்கள், காகிதங்கள் மற்றும் கடிதங்கள் இந்திய சுதந்திர இயக்கத்தின் மிக முக்கியமான தனிப்பட்ட கணக்குகளில் ஒன்றாக மாறியது. பின்னர் 1992 இல் வெளியிடப்பட்ட ஒரு நாட்குறிப்பில் தொகுக்கப்பட்ட இந்தி புத்தகம் இப்போது அவரது பேத்தி தன்வி ஸ்ரீவஸ்தவாவால் முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
அதில்., தொடரும்.,