இராணுவ ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் 1832 பேரின் முறையீட்டிற்கு தீர்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த  இராணுவ ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் இராணுவ ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

1832 ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் அவர்களது குறைகள் கேட்கப்பட்டு, இராணுவ ஆவணக் காப்பகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பி.சி.டி.ஏ. ஸ்பர்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் தீர்வு காணப்பட்டது.

அதிலும் குறிப்பாக வட்கமி, ஜெயந்தி, சரஸ்வதி ஆகியோரின் குறைகள் கேட்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.