கே.பி.ஆர். கலை கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி சார்பில் ஓணம் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமையுரை வழங்கினார்.

இவ்விழாவில் துறைகளுக்கு இடையேயான பூக்கோலப் போட்டி மற்றும் மகாபலி சக்கரவர்த்தி வரவேற்கும் நிகழ்வு நடத்தி, சிறந்து விளங்கிய துறைக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் என 2700 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை தொழில்முனைவோர் துறைத்தலைவர் விநாயக் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அனுராதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.