இரண்டு நாட்களில் பருவமழை துவங்குகிறது!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் வளிமண்டலத்தில் ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மழை தற்போது தான் பெய்யத் தொடங்கியுள்ளது, படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் இதே போன்று மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.