முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது

முப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற படை அலுவலர்கள் மற்றும் படைவீரர்கள் மறு வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில் புதுடெல்லி Directorate General of Resettlement மூலமாக பல்வேறு பொதுத் துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்குபெறும் , முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற நவம்பர் 14 ஆம் தேதி சென்னை, நந்தம்பாக்கம் Convention Centre, Trade Complex-ல் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுக்க முன்னாள் படைவீரர்கள் http://www.dgrindia.com என்னும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் முன்னாள் படைவீரர்கள் தங்களது முன்னால் படை வீரருக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, மற்றும் குறைந்தபட்சம் ஐந்து curriculum vitae நகல்கள் உடன் எடுத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கருத்தரங்கை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.